Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீங்க... எடையும் குறையும்..
Samba Rava Kanji Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் சில நாட்களில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள். கஞ்சியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சம்பா கோதுமை ரவை கஞ்சி. இந்த வகை கஞ்சி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.
அதுவும் இந்த கஞ்சியில் காய்கறிகள் சேர்த்திருப்பதால், இது சத்தானதும் கூட. முக்கியாக காலையில் இந்த கஞ்சியை ஒரு கப் குடித்தால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து சுறுசுறுப்பாக இருக்கலாம். அதோடு உடல் எடையிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்களுக்கு சம்பா ரவை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சம்பா ரவை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை சம்பா ரவை - 1 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* பீன்ஸ் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் சம்பா கோதுமை ரவையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பை சேர்த்து, இரண்டையும்,
நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு மசித்து, கஞ்சி பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
சேர்த்து சூடானதும், பொடியாக நறுகிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளியை
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள ரவையை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி,
புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான சம்பா கோதுமை ரவை கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications








