Latest Updates
-
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் -
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
இட்லி, தோசைக்கு ஒருமுறை தக்காளியை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்....
Rottukadai Thakkali Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? அதற்கு சற்று புளிப்பான, அதே சமயம் ருசியான ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* தக்காளி - 3
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* இட்லி மாவு - 1 சிறிய கரண்டி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் பச்சை மிளகாய் மற்றும் பூண்டையும் நன்கு பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பொடியாக நறுக்கிய
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சுவைக்கேற்ப உப்பு,
சாம்பார் தூள் மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி குக்கரை மூடி, 5-6 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதம், குக்கரைத் திறந்து, அதில் இட்லி மாவை ஒரு கரண்டி
சேர்த்து நன்கு கிளறி, ஒரு 5-10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
,
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பலை சேர்த்து
தாளித்து, தக்காளி சம்பாருடன் சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ரோட்டுக்கடை சுவையான தக்காளி
சாம்பார் தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications











