Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
பழைய சாதத்தை வைச்சு சப்பாத்தி செஞ்சு சாப்பிட்ருக்கீங்களா? இப்படி செஞ்சு பாருங்க... சூப்பரா இருக்கும்...!
Rice Chapati Recipe in Tamil: வீட்ல சாப்பாடு மீந்து போன தாளிச்சி சாப்பிடுவோம், பச்சை புளி சாதம் செய்வோம், இல்லை என்றால் தண்ணீரில் ஊற வைத்து பழைய சாதமாக சாப்பிடுவோம் அல்லது அதை வைத்து வடகம் செய்து சாப்பிடுவோம். ஆனால் சப்பாத்தி செய்து சாப்பிட்டிருக்கீறீர்களா? ஆம் மீதமான சாதத்துல சப்பாத்தி செய்து பாருங்க மிருதுவாக இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- மீந்து போன சாதம் - 1 கப்
- கோதுமை மாவு - 2 கப்
- தேவையான அளவு - உப்பு
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் மீதமாக இருக்கும் வடித்த சாதத்தை அளந்து எடுத்து அதில் சேர்க்க வேண்டும்.
- அதற்கு சமமான அளவு கோதுமை மாவையும் சேர்க்க வேண்டும் என்பதால் தான் இதை அளந்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்றாக மிக்ஸி ஜார் முழுவதும் தடவி கொள்ளுங்கள்.
- அதில் அளந்து எடுத்து வைத்த வடித்த சாதத்தை சேர்க்கவும்.
- உங்களுக்கு சாதத்தில் உப்பு சேர்த்து சமைக்கும் பழக்கம் இருந்தால் மாவிற்கு ஏற்றவாறு உப்பை போட்டுக் கொள்ள வேண்டும்.
- அல்லது சாதத்தில் உப்பு சேர்க்கும் பழக்கம் இல்லாத போது மாவிற்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும். இப்பொழுது அவை அனைத்தையும் நன்றாக கிளறிவிட்டு மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும்.
- இதை விட்டு விட்டு அரைத்து திறந்து ஒரு கிளறு கிளறி மறுபடியும் இரண்டு சுற்று சுற்ற வேண்டும்.
- சாதம் முழுவதும் அரைந்து மாவு பதத்திற்கு வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
-தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
- அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது. அந்த சாதத்தில் இருக்கும் ஈரப்பதமே அதிக அளவில் இருக்கும்.
- பின் அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு கோதுமை மாவு சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
- சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த பின் எப்போதும் போல் மாவின் மேல் ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை சேர்த்து நன்றாக தடவி 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைத்து விட வேண்டும்.
- பின் எப்பொழுதும் போல் சப்பாத்திக்கு மாவு உருட்டுவது போல் உருட்டி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போடவும்.
- ஒரு புறம் லேசாக நிறம் மாறியதும் அதை திருப்பி போட்டு உங்கள் விருப்பப்படி சப்பாத்தியில் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
- இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications