Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
1 கப் பச்சரிசியும், 1 கப் அவலும் இருந்தா இப்படி பன் தோசை செஞ்சு சாப்பிடுங்க.. சுவை வேற லெவல்-ல இருக்கும்..
Rice Bun Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி டிபன் செய்து போரடித்துவிட்டதா? இன்று காலை வித்தியாசமான அதே சமயம் சுவையான காலை டிபன் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சரிசியும் அவலும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான காலை டிபனை செய்து கெடுங்கள்.
இந்த காலை டிபன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இது தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உங்களுக்கு பச்சரிசி பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* அவல் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* எள்ளு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை
ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் அவலை எடுத்து, அதையும் நீரில் ஒருமுறை கழுவிவிட்டு,
நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பச்சரிசி மற்றும் அவலை மிக்சர் ஜாரில் ஒன்றாக
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அந்த மாவில் சில்லி ப்ளேக்ஸ், இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயம்,
கேரட் சேர்த்து தோசை மாவை விட ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுபப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், எள்ளு விதைகளை சேர்த்து தாளித்து, பின் அதில் 2 கரண்டி
மாவை ஊற்றி லேசாக பரப்பி விட வேண்டும்.
* பின் அதை சிறிது நேரம் மூடி வைத்து மிதமான தீயில் வைத்து முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான அரிசி பன் தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications






