Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் ரவா இருக்கா? அப்ப இந்த ஆந்திரா ஸ்பெஷல் அடை செய்யுங்க... இட்லி, தோசையை விட சூப்பரா இருக்கும்...!
Rava Adai Dosa Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது மாலை நேர உணவாக உற்பத்தி இட்லி, தோசைதான். சொல்லப்போனால் நம்மால் இட்லி, தோசை இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் வாரம் முழுக்க இவற்றையே சாப்பிட முடியாதல்லவா? இட்லி, தோசை போரடிக்கும் நேரத்தில் இடியாப்பம், பணியாரம் போன்றவற்றை செய்வோம்.
பிற டிபன்களில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவற்றை செய்ய அதிக நேரம் தேவைப்படும். எனவே குறைவான நேரத்தில் சுவையாக செய்யக்கூடிய ஒரு டிபனை நாம் கண்டறிய வேண்டும். அப்படியொரு டிபன்தான் ரவை அடை தோசை. இந்த ஆந்திரா ஸ்பெஷல் டிபனை சில நிமிடங்களில் செய்து விடலாம்.

காரமான தேங்காய் சட்னி அல்லது நாட்டுச்சர்க்கரை இதற்கு சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான ரவை அடையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் ரவை
- 2 ஸ்பூன் அரிசி மாவு
- அரை கப் புளித்த தயிர்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 2 ஸ்பூன் துருவிய கேரட்
- நறுக்கிய பச்சை மிளகாய்(தேவைப்பட்டால்)
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
- ரவாவுடன் அரிசி மாவு, புளிப்பான தயிர், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்குக் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- தேவைப்பட்டால் ரவையை வறுத்தும் அதனுடன் பிற பொருட்களை சேர்க்கலாம்.
- 30 நிமிடங்களுக்குப் பிறகு, நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து, இட்லி மாவின் நிலைத்தன்மைக்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
- உங்களுக்கு காரம் தேவைப்பட்டால் ஒரு பச்சை மிளகாயை நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
- மாவு ரெடியானதும் ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் மாவை ஊத்தாப்பம் போல ஊற்றி அடையை சுற்றி எண்ணெயை ஊற்றவும்.
- அடை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் தோசைக்கல்லில் இருந்து தட்டுக்கு மாற்றவும்.
- சூடான ரவை அடை ரெடி. இதை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் நாட்டு சர்க்கரை வைத்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications







