Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
கொள்ளு ரசம் இப்படி வைச்சு சாப்பிடுங்க... உடம்புல இருக்குற பிரச்சினையெல்லாம் சொல்லாம ஓடிப்போயிரும்...!
"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு" என்னும் பழமொழியை நாம் கேட்டிருப்போம். இதன் அர்த்தம் பூதம் போன்ற உடலையும் கொள்ளு வேகமாக கரைத்து விடும் என்பதாகும். நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்ததற்கு அவர்களின் உணவுமுறை மிகவும் முக்கியமான காரணமாக இருந்து. நம் முன்னோர்கள் கல்லைத் தின்றாலும் செரிக்கும் ஆற்றலுடன் இருந்தார்கள் அதற்குக் காரணம் அவர்கள் உணவில் சேர்த்துக் கொண்ட சில விஷயங்கள்தான்.
கொள்ளு ரசம் நம் முன்னோர்களின் முக்கியமான உணவுகளில் ஒன்றாக இருந்தது. சளி பிடித்தால் நம் அம்மா முதலில் சொல்லும் வார்த்தை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும் என்பதுதான். அந்த அளவிற்கு இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சளி, இருமலை குணப்படுத்துவது முதல் உடல் எடையை குறைப்பது வரை பல்வேறு நன்மைகளை அளிக்கும் இந்த கொள்ளு ரசத்தை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை - ½ ஸ்பூன்
புளி - ½ எலுமிச்சை அளவு
தக்காளி - 1
சீரகம் - 1½ ஸ்பூன்
மிளகு - 1½ ஸ்பூன்
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நன்றாக பழுத்த தக்காளியை போட்டு முழுகும்
அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.
- தக்காளியின் தோலில் விரிசல் ஏற்படும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- பின் அந்த சூடானா நீரில் அரை எலுமிச்சை அளவு புளியை சேர்த்து
தண்ணீர் ஆறும் வரை ஊற விடவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து கொள்ளு பருப்பை நன்கு சிவக்கும் படி
வறுக்கவும். கொள்ளு வெடிக்க துவங்கியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி
ஆறவிடவும்.
- அதே போல் கொத்தமல்லி விதைகளை வாணலியில் சேர்த்து வறுத்து
ஆறவிடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த கொள்ளு, கொத்தமல்லி விதை, மற்றும்
சிறிதளவு கல்லு உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- பின் அதனுடன் வரமிளகாய், மிளகு, 4-5 கருவேப்பிலை இலை, மற்றும்
பூண்டு சேர்த்து அரைக்கவும்.
- கடைசியாக சீரகம் சேர்த்து மிக்ஸில் இரண்டு பல்ஸ் விட்டு எடுத்து
கொள்ளவும்.
- தக்காளி மற்றும் புளியை நன்கு கரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
- இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பெரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் அடுப்பை குறைவான தீயிற்கு மாற்றவும்.
- பின் நாம் அரைத்து வைத்திருக்கும் கலவையை, எண்ணெயில்
சேர்க்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வாசம் வர துவங்கியதும், அதனுடன் தக்காளி மற்றும் புளி சாறை
சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நுரை
வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் சுவையான கொள்ளு ரசம்
ரெடி!



Click it and Unblock the Notifications











