Latest Updates
-
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க
அடுத்தமுறை ரசத்தை இப்படி செய்யுங்க... வீடும் மணக்கும் தட்டு சோறும் காலியாகும்..
Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்படி ரசம் செய்தாலும் அந்த ரசம் சுவையாக இருப்பதில்லையா? ஒரு நாள் நன்றாக வைத்தால், அடுத்த நாள் சொதப்பிவிடுகிறதா? அப்படியானால் அடுத்தமுறை ரசம் செய்வதாக இருந்தால், கீழே கொடுத்துள்ளவாறு செய்யுங்கள். இப்படி ரசம் செய்யும் போது, அந்த ரசம் சுவையாக இருப்பதோடு, வீடே மணக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் ரசம் செய்தால், ஒரு தட்டு சோறு டக்கென்று காலியாகிவிடும். அந்த அளவில் அதன் சுவையும், மணமும் இருக்கும்.
உங்களுக்கு நல்ல சுவையான ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* வரமல்லி - 1 டீஸ்பூன்
* மளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 7
* வரமிளகாய் - 1
* பூண்டு - 7-8
ரசத்திற்கு...
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பெரிய தக்காளி - 1
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள மல்லி, சீரகம்,
மிளகு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து ஒருமுறை பொடித்துக் கொள்ள
வேண்டும். பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து ஒருமுறை அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள புளியை கைகளால் நன்கு பிசைந்து, வடிகட்டி ஒரு
பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி,
கறிவேப்பிலை சேர்த்து கைகளால் தக்காளியை நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் புளி கரைசலை
ஊற்றி, பெருங்காயத் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து, ரசத்தில்
நுரைகட்ட தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான ரசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











