Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
ராகி உப்புமாவும், நீர் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.
Ragi Upma With Coconut Chutney In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு ராகி உப்புமாவை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் இந்த உப்புமாவிற்கு நீர் தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். ஒருமுறை இந்த காம்பவை செய்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். முக்கியமாக இந்த காம்போ செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ராகி உப்புமாவும், தேங்காய் சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி உப்புமா மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னிக்கு...
* சிறிய அளவிலான தேங்காய் - 1/4 மூடி
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 3
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிறிய அளவிலான வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
உப்புமாவிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், இஞ்சி, பூண்டு, பொட்டுக்கடலை,
பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியுடன் சற்று அதிகமாக நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள், வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த சட்னியை ஊற்றி கிளறி அடுப்பை அணைத்துவிட்டால்,
சுவையான நீர் சட்னி தயார்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,
அத்துடன் நெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் ராகி மாவை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 4 கப் நீரை ஊற்றி கிளறி, முதலில் மிதமான தீயில்
வைத்து மூடி சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி விட்டு, மீண்டும் மூடி
வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ராகி உப்புமாவும்,
தேங்காய் நீர் சட்னியும் தயார்



Click it and Unblock the Notifications











