Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் ராகி மாவும், 1 கப் வேர்க்கடலையும் வெச்சு.. இந்த உருண்டையை செஞ்சு தினமும் 1 சாப்பிடுங்க.. சத்தானது..
Ragi Laddu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் மற்றும் உங்கள் பிள்ளைகள் வலுவிழந்து பலவீனமாக இருப்பதை உணர்கிறீர்களா? அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? வீட்டில் ராகி மாவும், வேர்க்கடலையும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு உருண்டை செய்யுங்கள். இந்த உருண்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
முக்கியமாக இந்த உருண்டையை ஒருமுறை செய்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த உருண்டையை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுபெறும், இரத்தம் நன்கு ஊறும். வளரும் குழந்தைகளுக்கு இந்த உருண்டையை தினமும் கொடுத்து வந்தால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களுக்கு ராகி லட்டு/ராகி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* ராகி மாவு - 1 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* பொடித்த பனங்கருப்பட்டி - 3/4 கப்
* ஏலக்காய் - 2
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, சூடேற்றி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை
உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, புட்டு மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு துணியில் அந்த ராகி மாவை போட்டு, மூட்டை போன்று
கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து
வேக வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு தட்டில் வேக வைத்த ராகி மாவை போட்டு, கைகளால்
உதிர்த்துவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் பொடித்த
பனங்கருப்பட்டியை சேர்த்து, அத்துடன் ஏலக்காயையும் சேர்த்து, விட்டு
விட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த ராகி மாவை சேர்த்து விட்டு விட்டு அரைத்து,
ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கைகளால் கிளறி, லட்டு
போன்று கொஞ்சம் எடுத்து உருட்டிக் கொண்டால், ராகி லட்டு தயார்.



Click it and Unblock the Notifications