Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
1 கப் ராகி மாவும், 1 கப் வேர்க்கடலையும் வெச்சு.. இந்த உருண்டையை செஞ்சு தினமும் 1 சாப்பிடுங்க.. சத்தானது..
Ragi Laddu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் மற்றும் உங்கள் பிள்ளைகள் வலுவிழந்து பலவீனமாக இருப்பதை உணர்கிறீர்களா? அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? வீட்டில் ராகி மாவும், வேர்க்கடலையும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு உருண்டை செய்யுங்கள். இந்த உருண்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
முக்கியமாக இந்த உருண்டையை ஒருமுறை செய்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இந்த உருண்டையை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுபெறும், இரத்தம் நன்கு ஊறும். வளரும் குழந்தைகளுக்கு இந்த உருண்டையை தினமும் கொடுத்து வந்தால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களுக்கு ராகி லட்டு/ராகி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* ராகி மாவு - 1 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* பொடித்த பனங்கருப்பட்டி - 3/4 கப்
* ஏலக்காய் - 2
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, சூடேற்றி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை
உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, புட்டு மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு துணியில் அந்த ராகி மாவை போட்டு, மூட்டை போன்று
கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து
வேக வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு தட்டில் வேக வைத்த ராகி மாவை போட்டு, கைகளால்
உதிர்த்துவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் பொடித்த
பனங்கருப்பட்டியை சேர்த்து, அத்துடன் ஏலக்காயையும் சேர்த்து, விட்டு
விட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த ராகி மாவை சேர்த்து விட்டு விட்டு அரைத்து,
ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கைகளால் கிளறி, லட்டு
போன்று கொஞ்சம் எடுத்து உருட்டிக் கொண்டால், ராகி லட்டு தயார்.



Click it and Unblock the Notifications