இட்லிக்கு இந்த குருமாவை ஒருவாட்டி செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க...

Posted By:

Potato Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை குருமாவை செய்யுங்கள். அதுவும் உருளைக்கிழங்கு கொண்டு குருமா செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குருமா காலையில் சட்டென்று செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Potato Kurma How To Make a Potato Kurma For Idli

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 5 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

அரைப்பதற்கு...

* இஞ்சி - 2 துண்டு
* பூண்டு - 5 பல்
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* துருவிய தேங்காய் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு, கசகசா, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை வாணலியில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, மிதமான தீயில் வைத்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 20, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion