Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
2 உருளைக்கிழங்கும், 5 கத்திரிக்காயும் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சும்மா அள்ளும்..
Potato Brinjal Curry Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சிம்பிளாவும், அதே சமயம் டேஸ்ட்டியாவும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், கத்திரிக்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா செய்யுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலாவை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும். சொல்லப்போனால் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த மசாலா பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை செய்தால் அடிக்கடி செய்யத் தொடங்கிவிடுவீர்கள்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பெரிய கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி
உப்பு நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
* பின் கத்திரிக்காயையும் சற்று பெரிய துண்டுகளாக்கி, உப்பு நீரில் ஊற
வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்
தூள், மல்லித் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு
உருளைக்கிழங்குடன் சேருமாறு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறி, 5 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி
பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான



Click it and Unblock the Notifications