Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
உருளைக்கிழங்கு அவல் உப்புமா
பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை கொண்டு செய்யும் உப்புமா என்று பயப்பட வேண்டாம். அவல் கொண்டு செய்யும் உப்புமா. அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் அவல் உப்புமா. இது மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 2 கப்
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3-5 (பொடியாக நறுக்கியது)
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீர், உப்பு, 1/2 டீஸ்பூன் சக்கரை, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், தீயை அதிகரித்து, உருளைக்கிழங்கை பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் அவலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவல் நன்கு சூடானதும், மேலே கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு அவல் உப்புமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications










