Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பூண்டும், தக்காளியும் வெச்சு.. ஒருடைம் இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்...
Poondu Thakkali Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு ஒவ்வொரு நாளும் சட்னியை முடிவு செய்வதற்கு கடினமாக இருக்குமா? எப்போதும் ஒரே சுவையில் சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை ட்ரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பூண்டும், தக்காளியும் கொண்டு சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னி தக்காளி சட்னியைப் போன்றே இருப்பதால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். பேச்சுலர்கள், வேலைக்கு செல்வோர் இந்த சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், சட்டென்று செய்ய வசதியாக இருக்கும். இந்த சட்னி நினைத்திராத வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* வரமிளகாய் - 10
* தக்காளி - 1
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி
* கறிவேப்பிலை
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் வரமிளகாயையும்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளி மற்றும் கொத்தமல்லியைத் தூவி வதக்க
வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/2 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி
வதக்கி, அரைத்த சட்னியை சேர்த்து, 5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











