தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்

Posted By:

Peanut Tomato Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசைதான் முக்கிய உணவாக செய்கிறீர்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்ப இந்த தக்காளி வேர்க்கடலை சட்னியை ஒருதடவை செய்து பாருங்கள்.

Peanut Tomato Chutney Recipe How to Make at Home in Tamil

தக்காளி சட்னியை ஒரே மாதிரி அரைக்காம இந்த ஸ்டைலில் அரைச்சு பாருங்க. இந்த சுவையான சட்னியை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இந்த சட்னி அவரசமாக சமைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது)
- 2 தக்காளி
- 3 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 வர மிளகாய்
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- முதலில் அனைத்துப் பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதிக தக்காளிகளை போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும்;

- தோலை எளிதாக உரிப்பதற்கு ஏதுவாக, தக்காளியின் அடிப்பகுதியில் லேசாகக் கீறல் போடவும். பின்னர், வெந்நீரில் இருந்து எடுத்த தக்காளிகளின் தோலை உரித்து, அவற்றை நறுக்கி, தனியே எடுத்து ஆற வைக்கவும்.

- ஒரு மிக்சி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, வேகவைத்த தக்காளி, பச்சை மிளகாய், பூண்டுப் பற்கள் மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- தேவையான அளவு தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, மென்மையான மற்றும் கெட்டியான சட்னியாக அரைக்கவும். தேவைப்பட்டால், கூடுதல் புளி சேர்த்து உப்பு மற்றும் புளிப்புச் சுவையைச் சரிசெய்து கொள்ளவும்.

- உப்பைச் சரிபார்த்து, உங்கள் சுவைக்கேற்ப சரிசெய்து கொள்ளவும். பின்னர் சட்னியைப் பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும்.

- ஒரு சிறிய வாணலியில் மிதமான தீயில் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் கடுகு சேர்த்து அது வெடிக்கும் வரை காத்திருக்கவும். பின்னர், உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- உளுத்தம் பருப்பு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறி, வாசனை வரும் வரை சில நொடிகள் வதக்கவும்.

- தயார் செய்து வைத்துள்ள தாளிப்பை, அரைத்து வைத்துள்ள சட்னி கலவையின் மீது ஊற்றி, நன்கு கிளறவும்.

- இந்த தக்காளி வேர்க்கடலைச் சட்னி தோசை, இட்லி, ஊத்தப்பம், சாதம் என அனைத்திற்க்கும் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 18, 2026, 19:49 [IST]
Desktop Bottom Promotion