Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
காய்கறி இல்லாத நேரத்துல இந்த புதுமையான பருப்பு வறுத்த குழம்பை செய்யுங்க.. சட்டி சோறு நொடியில் காலியாகும்..
Paruppu Varutha Kulambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதியம் சமைக்க காய்கறி எதுவும் இல்லை? சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அப்படியானால் பருப்பு வறுத்த குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.
முக்கியமாக இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இந்த பருப்பு வறுத்த குழம்பை செய்தால், பின் வாரம் ஒருமுறை இந்த குழம்பை செய்ய சொல்லி கேட்பார்கள். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்யலாம். அந்த அளவு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு பருப்பு வறுத்த குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு வறுத்த குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 7
* பூண்டு - 10 பல்
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* தண்ணீர் - 2 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 கப் துவரம் பருப்பை சேர்த்து, மிதமான
தீயில் வைத்து, சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயத்தை
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்து, பருப்பு பொன்னிறமாகும்
வரை வறுத்து இறக்க வேண்டும்.
* பிறகு குக்கரில் வறுத்த பொருட்களை போட்டு, அதில் 2 1/2 கப் நீரை
ஊற்றி கலந்து, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், புளிச்சாறு
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மத்து கொண்டு நன்கு
மசித்து விட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், வரமிளகாய், பொடியாக நறுக்கிய
வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வெங்காயம்
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக தாளித்ததை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து
கிளறினால், சுவையான வறுத்த பருப்பு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











