Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பன்னீர் குலாப் ஜாமூன்
பன்னீர் குலாப் ஜாமூன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
அனைவருக்குமே குலாப் ஜாமூன் என்றால் வாயில் எச்சில் ஊறும். இது பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். குலாப் ஜாமூனை பலவாறு சமைப்பார்கள். அதில் பிரட் ஜாமூன், பால் பவுடர் ஜாமூன், மலாய் குலாப் ஜாமூன், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன், பன்னீர் குலாப் ஜாமூன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது நாம் இவற்றில் பன்னீர் குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று காணப் போகிறோம்.

பன்னீர் உடலுக்கு மிகவும் நல்லது. பன்னீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும். பன்னீர் குலாப் ஜாமூன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செய்ய ஏற்றது.
இப்போது பன்னீர் குலாம் ஜாமூனின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப் (உதிர்த்தது)
* மைதா - 3 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சர்க்கரை சிரப் செய்வதற்கு...
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை கலவை ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் குங்குமப்பூவை சேர்த்து கலந்து இறக்கி, மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி, குளிர வைக்க வேண்டும்.
* ஒரு உதிர்த்து வைத்துள்ள பன்னீரை நன்கு கையால் மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, வெதுவெதுப்பான சர்க்கரை சிரப்பில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்தால், சுவையான பன்னீர் குலாம் ஜாமூன் தயார்....



Click it and Unblock the Notifications