Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஒருடைம் பன்னீர் சப்பாத்தியும்.. அதுக்கு சைடு டிஷ்ஷா பன்னீர் சாஸ்-ம் செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Paneer Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் அந்த சப்பாத்திக்கு எப்போதும் குருமா, கிரேவி என்று செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை வெறும் சப்பாத்தியை செய்யாமல், சற்று ஸ்பெஷலாக பன்னீர் சப்பாத்தி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் சாஸ் செய்யுங்கள். இப்படி செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.
உங்களுக்கு பன்னீர் சப்பாத்தி மற்றும் பன்னீர் சாஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் சாஸ் மற்றும் பன்னீர் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* துருவிய பன்னீர் - 1 கப்
* துருவிய சீஸ் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
பன்னீர் சாஸ்...
* முந்திரி - 1 கைப்பிடி
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* பன்னீர் - சில துண்டுகள்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பால் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் சிறிது
உப்பு சேர்த்து, எண்ணெய் ஊற்றி கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு
மென்மையாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் துருவிய பன்னீர் மற்றும் சீஸை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சிறிது உப்பு
மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, கொஞ்சம் கொத்தமல்லியைத் தூவி,
நன்கு கிளறி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பன்னீர் சாஸ் செய்வதற்கு முந்திரி மற்றும் வரமிளகாயை
சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிது எடுத்து உருட்டி,
வட்டமாக தேய்த்து, முனைப்பகுதியை கத்தியால் கீறி நீக்கி, சதுர வடிவில்
செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவின் நடுவே பன்னீர் கலவையை வைத்து, முனைகளால்
சப்பாத்தியை மூட வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து
கொள்ள வேண்டும்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து
வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு நெய் ஊற்றி, முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், பன்னீர் சப்பாத்தி தயார்.
* இறுதியாக மிக்சர் ஜாரில், ஊற வைத்துள்ள முந்திரி மற்றும் காஷ்மீரி
வரமிளகாயை எடுத்து, அத்துடன் சிறிது பன்னீர் துண்டுகள், மிளகாய் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது பாலை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், பன்னீர் சாஸ்
தயார்.
* இந்த பன்னீர் சப்பாத்தியை பன்னீர் சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால்
இன்னும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











