Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ருசியான.. பன்னீர் பட்டர் மசாலாவை 15 நிமிடத்தில் செஞ்சுடலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Paneer Butter Masala In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் அந்த சப்பாத்திக்கு அடிக்கடி பன்னீர் சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பன்னீர் பட்டர் மசாலா என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பார்களா?
ஆனால் நீங்கள் இதை செய்ய அதிக நேரம் எடுக்குமா? அப்படியானால் சிம்பிளாக எப்படி பன்னீர் பட்டர் மசாலாவை செய்வதென்று தெரிந்து செய்யுங்கள். சொல்லப்போனால் பன்னீர் பட்டர் மசாலாவை 15 நிமிடத்தில் கூட செய்துவிடலாம். இதை தெரிந்து வைத்துக் கொண்டால், காலை வேளையில் ஸ்கூலுக்கு, ஆபிஸிற்கு என்று கூட செய்யலாம்.

உங்களுக்கு 15 நிமிடத்தில் பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 15 நிமிடத்தில் செய்யக்கூடிய பன்னீர் பட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, மஞ்சள் தூள், மிளகாய்
தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1
டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 1
கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து,
மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க
வேண்டும்.
* மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்ததும், மூடியைத் திறந்து பன்னீர்
துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சிறிது கசூரி மெத்தியை தூவி, 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெயை சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான பன்னீர் பட்டர் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications











