Just In
- 13 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 42 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பன்னீர் பிரியாணி
சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடியதாக பன்னீர் பிரியாணி இருக்கும். இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம் அல்லது வெறும் பன்னீரைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
பிரியாணி பலரது விருப்பமான உணவு. இந்த பிரியாணியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் சாப்பிடுவது சிக்கன், மட்டன் பிரியாணியாகவே இருக்கும். ஆனால் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடியதாக பன்னீர் பிரியாணி இருக்கும். இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம் அல்லது வெறும் பன்னீரைப் பயன்படுத்தியும் செய்யலாம். அதெல்லாம் ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்தது.
உங்களுக்கு காய்கறிகள் சேர்க்காமல், பன்னீர் பயன்படுத்தி பிரியாணி செய்ய வேண்டுமானால், கீழே பன்னீர் பிரியாணி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 2 கப்
* பன்னீர் - 250 கிராம்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 5 (நறுக்கியது)
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 4 பற்கள்
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* புதினா இலைகள் - சிறிது
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில், கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், பிரியாணி இலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். அதன்பின் புதினா இலைகளையும், கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், குறைவான தீயில் 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு முறை கிளறி விட்டால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.
Image Courtesy: archanaskitchen