Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 6 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பன்னீர் பிரியாணி
சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடியதாக பன்னீர் பிரியாணி இருக்கும். இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம் அல்லது வெறும் பன்னீரைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
பிரியாணி பலரது விருப்பமான உணவு. இந்த பிரியாணியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் சாப்பிடுவது சிக்கன், மட்டன் பிரியாணியாகவே இருக்கும். ஆனால் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடியதாக பன்னீர் பிரியாணி இருக்கும். இந்த பன்னீர் பிரியாணியை காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம் அல்லது வெறும் பன்னீரைப் பயன்படுத்தியும் செய்யலாம். அதெல்லாம் ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்தது.
உங்களுக்கு காய்கறிகள் சேர்க்காமல், பன்னீர் பயன்படுத்தி பிரியாணி செய்ய வேண்டுமானால், கீழே பன்னீர் பிரியாணி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 2 கப்
* பன்னீர் - 250 கிராம்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 5 (நறுக்கியது)
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 4 பற்கள்
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* புதினா இலைகள் - சிறிது
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில், கிராம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், பிரியாணி இலை, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். அதன்பின் புதினா இலைகளையும், கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், குறைவான தீயில் 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு முறை கிளறி விட்டால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.
Image Courtesy: archanaskitchen