Latest Updates
-
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! -
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Onam Special Pazham Nurukku Recipe In Tamil: கேரளாவில் மிகவும் கோலாகலமாக 10 நாட்கள் கொண்டாடப்படுவது தான் ஓணம் பண்டிகை. இந்த ஓணம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஓணம் சத்யா விருந்து தான். இது தான் இந்த பண்டிகையின் சிறப்பே. இந்த விருந்தில் வாழை இலையில் 15-க்கும் அதிகமான பாரம்பரிய கேரள உணவுகள் சமைப்பது வழக்கம்.

நீங்கள் இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷலான கேரள ரெசிபியை செய்ய நினைத்தால், பழ நுருக்கு ரெசிபியை செய்யுங்கள். எப்படி தமிழ்நாட்டில் வாழைப்பழத்தைக் கொண்டு பஞ்சாமிர்தம் செய்யப்படுகிறதோ, அதேப் போல் கேரளாவில் செய்யக்கூடியது தான் பழ நுருக்கு.
உங்களுக்கு இந்த பழ நுருக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பழ நுருக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* கனிந்த நேந்திரன் பழம் - 2
* சுக்கு - சிறிது
* ஏலக்காய் - 2
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கெட்டியான தேங்காய் பால் - 1 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் வெல்லத்தை எடுத்துக் கொண்டு,
அதில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக
வெட்டி, ஒரு வாணலியில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அடுப்பில்
வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து
நன்கு 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் சுக்கு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து
நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பொடியை வெந்து கொண்டிருக்கும் பழத்துடன் சேர்த்து,
உப்பு தூவி கிளறி நன்கு வேக வைக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், துருவிய தேங்காய்,
கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, நெய் ஊற்றி கிளறி, மூடி வைத்து
கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான பழ நுருக்கு
தயார்.



Click it and Unblock the Notifications