Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
மட்டன் கோலா உருண்டை!

தேவையான பொருட்கள்:
எலும்பு நீக்கிய ஆட்டுக்கறி - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பொட்டுகடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இளம் ஆட்டுக்கறியை பொடியாக நறுக்கி வாங்கவும். இது அரைப்பதற்கு எளிதாக இருக்கும். கறியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். கறியில் கொழுப்பு போன்றவை இருந்தால் அவற்றை நீக்கிவிடவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காய், பெருங்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கறியை போட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். அதில் பொட்டுக்கடலைமாவு, தேங்காய், சோம்பு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, கெட்டியாக நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, ஒரு தடவைக்கு ஐந்து ஆறாக, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மட்டன் கோலா தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications











