Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
கோஹினூர் சிக்கன் ரெசிபி
விடுமுறை நாட்களில் தான் நன்கு சுவையான உணவுகளை சமைத்து, நிம்மதியாக சாப்பிட முடியும். அதிலும் சற்று வித்தியாசமான முறையில் சிக்கனை சமைத்து சாப்பிட்டால், அது வித்தியாசமான ரெசிபியாக இருப்பதோடு, வித்தியாசமான அனுபவத்தையும் பெறலாம். அந்த வகையில் கோஹினூர் வைரத்திற்கு மட்டும் பிரபலமல்ல, சிக்கன் ரெசிபிக்கும் தான் பிரபலமானது. ஏனெனில் அந்த அளவு கோஹினூர் சிக்கன் ரெசிபியின் ருசியானது இருக்கும்.
இப்போது அந்த கோஹினூர் சிக்கன் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
தேங்காய் பால் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - தேவையான அளவு
கரம் மசாலா - 1-2 சிட்டிகை
குங்குமப்பூ - 1-2 சிட்டிகை
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, கரம் மசாலா மற்றும் குங்குமப்பூ போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கனை துண்டுகளை மைதா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அடுத்து தக்காளி மற்றும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
கிரேவியானது நன்கு கொதித்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, கிரேவியானது ஓரளவு சுண்டும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
பின்னர் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











