Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
முட்டை கட்லெட் குழம்பு
தேவையான பொருட்கள்
முட்டை - 6
பெரிய கேரட் - 1
பொட்டுகடலைமாவு - அரை கப்
தேங்காய் - 1 முடி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
மிளகாய் - 6
இஞ்சி - சிறிதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
கசகசா - 2 ஸ்பூன்
பூண்டு - 8
சீரகம் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி, கருவேப்பிலை.
செய்முறை:
முதலில் கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் முட்டையை நன்றாக கடைந்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய் விழுது இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் நெய் தடவி அதில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
ஆறிய பின் தனியாக கிண்ணத்திலிருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் இந்த கலவையை ஒரு அகல பாத்திரத்தில் கொட்டி இதனுடன் கட்லட்களை போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.
ஆறிய பின் கட்லெட் எடுத்து தனியாக தட்டில் வைத்து அதன் மீது கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். இதை பரோட்டா, சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications