Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இறால் மசாலா ரெசிபி
இறாலைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். மேலும் கடல் உணவுகளிலேயே இறால் செய்வது என்பது மிகவும் எளிமையானது. குறிப்பாக அலுவலகம் முடிந்து வீட்டிற்கு அவசரமாக வந்ததும், ஏதேனும் அசைவ உணவு சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், இறாலை வாங்கி வந்து, சூப்பரான முறையில் ஒரு மசாலா செய்து சாப்பிடலாம்.
இப்போது இங்கு அப்படி எளிமையான முறையில் செய்யக்கூடிய இறால் மசாலா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை இன்று முயற்சித்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
இறால் - 250 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, உப்பு போட்டு கழுவி நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் இறலைப் போட்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை அரைத்து, வாணலியில் ஊற்றி கிளறி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி, தக்காளி சாஸ், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம், இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கினால், சுவையான இறால் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications