கோழி குருமா

By Staff


தேவையான பொருட்கள்:

750 கிராம் கோழிக்கறி, 50 கிராம் பட்டாணி, 3 மேசைக்கரண்டி தேங்காய் விழுது, 2 மேசைக் கரண்டி வெங்காய விழுது, 1 மேசைக்கரண்டி கொத்துமல்லி, 1 எலுமிச்சை, 2 தேக்கரண்டி கசகசா தூள், 2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 மேசைக்கரண்டி தனியா தூள், 50 கிராம் உருளைக்கிழங்கு, 6 பட்டை, கிராம்பு, 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் விழுது, 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி தக்காளி விழுது, தேவைக்கேற்ப பொரிகடலை மாவு, கொஞ்சம் உப்பு.

செய்முறை:

கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கர் பாத்திரத்தில் போடவும். அதனுடன் தேங்காய், உப்பு, கசகசா, மஞ்சள், ஊறவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வாசனைப்பூ, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு சேர்த்து வதக்கவும். வெந்த கறிக் கலவையைக் கொட்டி தனியாத் தூள், தக்காளி விழுது, பொரிகடலை மாவு சேர்த்து கலக்கவும்.கொதித்த பின் கொத்துமல்லி தூவி இறக்கினால் கோழி குருமா தயார். சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்கவும்.

Story first published: Wednesday, October 3, 2007, 13:17 [IST]
Desktop Bottom Promotion