Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இறால் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 2
பச்சை மிளகாய் - 2+3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 2 பல் (நறுக்கியது)
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் முற்றிலும் வடியும் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, நறுக்கிய 2 பச்சை மிளகாய், முட்டை வெள்ளை கரு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலை அந்த கலவையில் நனைத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள பச்சை மிளகாய், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளி கெட்சப், மிளகாய் சாஸ் மற்றும் சோயா சாஸை ஊற்றி, நன்கு கொதிக்கும் வரை கிளற வேண்டும்.
கலவையானது நன்கு கொதிக்கும் போது, அதோடு வினிகர் சேர்த்து 3-4 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவி கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறால் துண்டுகளை போட்டு, 6-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
ஒரு வேளை கிரேவி அதிக நீருடன் காணப்பட்டால், அப்போது சிறிது சோள மாவை சேர்த்து கிளறினால், கிரேவி சற்று கெட்டியாகிவிடும். பின் அதனை இறக்கிவிடலாம்.
இப்போது சுவையான இறால் மஞ்சூரியன் ரெடி!!! இதனை ப்ரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் உடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
குறிப்பு: வேண்டுமென்றால் இதனை சற்று கிரேவியாக சமைத்து, சாதத்துடன் சாப்பிட்டாலும், அருமையாக இருக்கம்.



Click it and Unblock the Notifications











