Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இறால் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 2
பச்சை மிளகாய் - 2+3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 2 பல் (நறுக்கியது)
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் முற்றிலும் வடியும் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, நறுக்கிய 2 பச்சை மிளகாய், முட்டை வெள்ளை கரு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலை அந்த கலவையில் நனைத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள பச்சை மிளகாய், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளி கெட்சப், மிளகாய் சாஸ் மற்றும் சோயா சாஸை ஊற்றி, நன்கு கொதிக்கும் வரை கிளற வேண்டும்.
கலவையானது நன்கு கொதிக்கும் போது, அதோடு வினிகர் சேர்த்து 3-4 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, கிரேவியை நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவி கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறால் துண்டுகளை போட்டு, 6-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
ஒரு வேளை கிரேவி அதிக நீருடன் காணப்பட்டால், அப்போது சிறிது சோள மாவை சேர்த்து கிளறினால், கிரேவி சற்று கெட்டியாகிவிடும். பின் அதனை இறக்கிவிடலாம்.
இப்போது சுவையான இறால் மஞ்சூரியன் ரெடி!!! இதனை ப்ரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் உடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
குறிப்பு: வேண்டுமென்றால் இதனை சற்று கிரேவியாக சமைத்து, சாதத்துடன் சாப்பிட்டாலும், அருமையாக இருக்கம்.



Click it and Unblock the Notifications