Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
3 நெல்லிக்காய் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Amla Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னியை தான் செய்வீர்களா? அப்படியே சட்னி செய்வதாக இருந்தாலும், ஒரே மாதிரியான சட்னியைத் தான் அடிக்கடி செய்வீர்களா? உங்கள் வீட்டில் நெல்லிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த நெல்லிக்காய் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த நெல்லிக்காய் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே மழை நேரத்தில் இந்த நெல்லிக்காயை சட்னியை செய்து சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம்.

உங்களுக்கு நெல்லிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - 1 கையளவு
* பூண்டு - 4 பல்
* நெல்லிக்காய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 1 கையளவு கொத்தமல்லி, 4 பல்
பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின்பு சிறு துண்டு புளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, சிறிது
நீரை ஊற்றி மிகவும் கெட்டியாக இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்
மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications