Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஆட்டு ரத்த பொரியலை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Mutton Ratha Poriyal Recipe In Tamil: வார விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிட்டு, அந்நாளை ஜாலியாக என்ஜாய் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் பெரும்பாலும் மட்டன் தான் செய்வீர்களா? மட்டனில் ஆட்டு இரத்தம் என்றால் ரொம்ப பிடிக்குமா?
அந்த ஆட்டு இரத்தத்தை பொரியல் செய்து குடல் குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் பிரமாதமாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் இருப்போருக்கு ஆட்டு ரத்தம் பிடிக்காதா? அப்படியானால் அவர்களுக்கு ஆட்டு இரத்தத்தை இந்த பக்குவத்தில் செய்து கொடுங்கள். இதனால் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

முக்கியமாக இந்த ஆட்டு இரத்தம் செய்வதற்கு நறுமணமிக்க கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று எதையும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அந்த இரத்த பொரியல் வாயில் வைக்க முடியாத அளவில் மோசமாக இருக்கும். எனவே மணமில்லாத ரீபைன்டு எண்ணெயில் செய்யுங்கள். அதோடு, இந்த பொரியலுக்கு உப்பையும் சேர்க்காதீர்கள்.
உங்களுக்கு ஆட்டு இரத்த பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டு இரத்த பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 8 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* ஆட்டு இரத்தம்
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஆட்டு இரத்தத்தை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, நீரை
முற்றிலும் வடித்துவிட்டு, பின் கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அந்த இரத்தத்தை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க
வேண்டும்.
* முக்கியமாக இந்த பொரியலுக்கு உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது. அதேப்
போல் நீரையும் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இரத்தத்தில் இருந்தே நீர்
பிரிந்து வரும்.
* இரத்தத்தை சேர்த்ததும், தொடர்ந்து கிளறி விட வேண்டும். நீர்
முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* நீர் முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
ஆட்டு இரத்த பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications