Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஆட்டு ரத்த பொரியலை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Mutton Ratha Poriyal Recipe In Tamil: வார விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிட்டு, அந்நாளை ஜாலியாக என்ஜாய் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் பெரும்பாலும் மட்டன் தான் செய்வீர்களா? மட்டனில் ஆட்டு இரத்தம் என்றால் ரொம்ப பிடிக்குமா?
அந்த ஆட்டு இரத்தத்தை பொரியல் செய்து குடல் குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் பிரமாதமாக இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் இருப்போருக்கு ஆட்டு ரத்தம் பிடிக்காதா? அப்படியானால் அவர்களுக்கு ஆட்டு இரத்தத்தை இந்த பக்குவத்தில் செய்து கொடுங்கள். இதனால் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

முக்கியமாக இந்த ஆட்டு இரத்தம் செய்வதற்கு நறுமணமிக்க கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று எதையும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், அந்த இரத்த பொரியல் வாயில் வைக்க முடியாத அளவில் மோசமாக இருக்கும். எனவே மணமில்லாத ரீபைன்டு எண்ணெயில் செய்யுங்கள். அதோடு, இந்த பொரியலுக்கு உப்பையும் சேர்க்காதீர்கள்.
உங்களுக்கு ஆட்டு இரத்த பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டு இரத்த பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 8 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* ஆட்டு இரத்தம்
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஆட்டு இரத்தத்தை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, நீரை
முற்றிலும் வடித்துவிட்டு, பின் கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அந்த இரத்தத்தை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க
வேண்டும்.
* முக்கியமாக இந்த பொரியலுக்கு உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது. அதேப்
போல் நீரையும் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இரத்தத்தில் இருந்தே நீர்
பிரிந்து வரும்.
* இரத்தத்தை சேர்த்ததும், தொடர்ந்து கிளறி விட வேண்டும். நீர்
முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* நீர் முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
ஆட்டு இரத்த பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











