பாய் வீட்டு மட்டன் பிரியாணியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?

Posted By:

Muslim Style Mutton Biryani Recipe: உங்கள் வீட்டில் உள்ளோர் பிரியாணி பிரியர்களா? இதனாலேயே உங்கள் வீட்டில் அடிக்கடி பிரியாணி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி பிரியாணி செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கு பாய் வீட்டு பிரியாணியை சுவைக்க ஆசையாக உள்ளதா?

அப்படியானால் இந்த வாரம் பாய் வீட்டு மட்டன் பிரியாணியை உங்கள் வீட்டில் ட்ரை செய்யுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Mutton Biryani How To Make a Muslim Style Mutton Biryani Recipe

உங்களுக்கு பாய் வீட்டு மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாய் வீட்டு மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1/2 கிலோ
* பாசுமதி அரிசி - 300 கிராம்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - 1
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 6
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 6
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 2
* பிரியாணி இலை - 3
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் -
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி விட்டு, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் தக்காளியை சேர்த்து ஒருமுறை வதக்கி விட வேண்டும்.
* அதன் பின் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, பின் எலுமிச்சை சாற்றினை சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து, பின் 3/4 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சாதத்தை வடிக்க தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 பிரியாணி இலை, 3 கிராம்பு, 1 துண்டு பட்டை, சிறிது புதினா சேர்த்து, அதன் பின் ஊற வைத்த அரிசியை அப்படியே சேர்த்து, சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, 10 நிமிடம் சாதத்தை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, சாதத்தில் உள்ள நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வடிகட்டிய நீரை கீழே ஊற்றி விட வேண்டாம். அதைக் கொண்டு தான் தம் போடப் போகிறோம்.
* நீரை வடிகட்டிய பின், குக்கரில் உள்ள மட்டனை அப்படியே சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, காற்று புகாதவாறு ஒரு தட்டு கொண்டு மூடி, அதன் மேல் அரிசி வடிகட்டிய நீர் பாத்திரத்தை வைத்து, குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சுவையான பாய் வீட்டு மட்டன் பிரியாணி தயார்.

Image Courtesy: Cook with Sharmila

[ of 5 - Users]
Story first published: Sunday, May 26, 2024, 14:23 [IST]
Desktop Bottom Promotion