Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
காளான் சூப்
நீங்கள் சூப்பை விரும்பி குடிப்பவரா? தினமும் உங்களின் உணவில் சூப் இருக்குமா? உங்களுக்கு காளான் சூப் ரொம்ப பிடிக்குமா? இதுவரை கடைகளில் தான் காளான் சூப்பை வாங்கி குடித்திருப்பீர்கள். அதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
நீங்கள் சூப்பை விரும்பி குடிப்பவரா? தினமும் உங்களின் உணவில் சூப் இருக்குமா? உங்களுக்கு காளான் சூப் ரொம்ப பிடிக்குமா? இதுவரை கடைகளில் தான் காளான் சூப்பை வாங்கி குடித்திருப்பீர்கள். ஆனால் அதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அதுவும் உங்களுக்கு ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுக்கும் க்ரீமி சூப் பிடிக்குமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும்.

உங்களுக்கு க்ரீமி காளான் சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* வெங்காயம் - 1/2
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* கார்ன் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
க்ரீமிக்கு தேவையானவை...
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* பால் - 2 கப்
* உப்பு மற்றும் மிளகுத் தூள்
செய்முறை:
* முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காளானை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். காளான் மென்மையானதும், பச்சை பட்டாணி, கார்ன் சேர்த்து நன்கு கிளறி, பின் மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து குறைவான தீயில் வைத்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக கிளற வேண்டும்.
* பிறகு பாலை ஊற்றி கெட்டியாக விட வேண்டும். பால் கெட்டியானதும், வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறி கொதிக்க விட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காளான் சூப் தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications












