Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
காளான் வெச்சு எப்பவும் கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி பாயா செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Mushroom Paya Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு காளான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் கிரேவி செய்ய போகிறீர்களா? அப்படியானால் காளானைக் கொண்டு கிரேவி செய்யாமல், ஒருமுறை பாயா செய்யுங்கள்.
இந்த காளான் பாயா வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த பாயா சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், தோசை போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு காளான் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம்
அரைப்பதற்கு...
* முந்திரி - 7-8
* கசகசா - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
வதக்குவதற்கு...
* வெண்ணெய் - சிறிது
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
பாயாவிற்கு...
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் முந்திரி மற்றும் கசகசாவை நீரில் சிறிது நேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் காளானை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் ஊற
வைத்துள்ள முந்திரி மற்றும் கசகசாவை நீருடன் அப்படியே சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து
உருகியதும், அதில் வெட்டி வைத்துள்ள காளானை சேர்த்து, மிளகுத் தூள்
மற்றும் உப்பு தூவி நன்கு சிறிது நேரம் வதக்கி ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பட்டை,
கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, மிளகுத் தூள் தூவி, தக்காளி மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள காளான் மற்றும் அரைத்து வைத்துள்ள
தேங்காய் விழுதை சேர்த்து, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து,
இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காளான் பாயா தயார்.



Click it and Unblock the Notifications