மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Murungai Keerai Kollu Soup Recipe In Tamil: உங்களுக்கு கை கால் மூட்டு வலி அதிகமா இருக்கா? அடிக்கடி மாலை வேளைகளில் மழை பெய்வதால் உங்கள் வீட்டில் உள்ளோர் சளி தொல்லையால் சிரமப்படுகிறார்களா? அப்படியானால் இப்படியான சூழ்நிலையில் வீட்டில் முருங்கைக்கீரையும், கொள்ளு பருப்பும் இருந்தால், அவற்றைக் கொண்டு சூப் செய்து குடியுங்கள். அதுவும் இந்த சூப்பை குடிக்கும் போது உடலில் இரத்தம் நன்கு ஊறவும் செய்யும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் வலுவடையும்.

Murungai Keerai Kollu Soup How To Make This Tasty And Healthy Soup Recipe

உங்களுக்கு இந்த முருங்கைக்கீரை கொள்ளு சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கொள்ளு சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைத்து அரைப்பதற்கு...

* கொள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 1/4 கப்
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* சின்ன வெங்காயம் - 10
* கொத்தமல்லி - சிறிது
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* இடிச்ச சின்ன வெங்காயம் - 5
* முருங்கைக்கீரை - 10 இலைகள்
* சூப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும். பின் அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சீரகம், மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து, 1/2 லிட்டர் நீரை ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போன பின் குக்கரைத் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வடிகட்டிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததையும் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இடிச்ச சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 10 முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி, வடிகட்டி வைத்துள்ள சூப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான முருங்கைக்கீரை கொள்ளு சூப் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 11, 2026, 15:41 [IST]
Desktop Bottom Promotion