Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சப்பாத்தி, பூரிக்கு நச்சுன்னு ஒரு சைடு டிஷ் பண்ணணுமா? அப்ப பட்டாணி காளான் மசாலா செய்யுங்க..
Matar Mushroom Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போறீங்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காளான் பிடிக்குமா? வீட்டில் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பட்டாணியுடன் காளானை சேர்த்து மசாலா செய்யுங்கள். இந்த பட்டாணி காளான் மசாலா செய்வது மிகவும் ஈஸி.

மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது மாலை வேளையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சீக்கிரம் செய்யக்கூடியவாறு எளிமையான செய்முறையைக் கொண்டது.
உங்களுக்கு பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி காளான் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 200 கிராம்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கசூரி மெத்தி மற்றும் இஞ்சியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து, 10
நிமிடம் காளானை வேக வைக்க வேண்டும். காளான் நன்கு நீர் விட்டு
வெந்ததும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15-20
நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது, 5
நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* நீர் முழுவதும் வற்றியதும், அதில் பாலை ஊற்றி கிளறி, குறைவான தீயில்
வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேல கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான பட்டாணி காளான் மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications