Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சப்பாத்தி, பூரிக்கு நச்சுன்னு ஒரு சைடு டிஷ் பண்ணணுமா? அப்ப பட்டாணி காளான் மசாலா செய்யுங்க..
Matar Mushroom Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போறீங்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காளான் பிடிக்குமா? வீட்டில் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பட்டாணியுடன் காளானை சேர்த்து மசாலா செய்யுங்கள். இந்த பட்டாணி காளான் மசாலா செய்வது மிகவும் ஈஸி.

மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது மாலை வேளையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சீக்கிரம் செய்யக்கூடியவாறு எளிமையான செய்முறையைக் கொண்டது.
உங்களுக்கு பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி காளான் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 200 கிராம்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கசூரி மெத்தி மற்றும் இஞ்சியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து, 10
நிமிடம் காளானை வேக வைக்க வேண்டும். காளான் நன்கு நீர் விட்டு
வெந்ததும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15-20
நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது, 5
நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* நீர் முழுவதும் வற்றியதும், அதில் பாலை ஊற்றி கிளறி, குறைவான தீயில்
வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேல கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான பட்டாணி காளான் மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
