Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை
மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா செய்வது எப்படி?
Mangalore Kara Bonda: என்ன தான் கோடைக்காலமாக இருந்தாலும், பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் பலருக்கும் மாலை வேளையில் நன்கு சூடாக பஜ்ஜி, போண்டா என்று ஏதாவது சாப்பிடத் தோன்றும். இன்று மாலை உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸாக என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்பெஷல் கார போண்டாவை செய்யுங்கள்.
இந்த கார போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த மங்களூர் ஸ்டைல் கார போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புளித்த தயிர் - 1/2 கப்
* சமையல் சோடா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, ரவை, பொடியாக
நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் புளித்த தயிர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து போண்டா மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை தண்ணீர் சேர்க்காமல்
கலக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீரைத் தெளித்து பிசைய
வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் ஆனதும், அதில் சமையல் சோடாவை சேர்த்து நன்கு பிசைய
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கையை நீரில் நனைத்து பிசைந்து
வைத்துள்ள மாவை சிறிது எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால்,
மங்களூர் ஸ்டைல் கார போண்டா தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications