Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம்
நாம் வாழும் பூமி பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்ததாகும். தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகில் நாம் எந்த இடத்திற்கும் செல்லலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது, ஆனால் அது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். பூமியில் சில இடங்கள் மனிதர்களால் நுழைய முடியாததாக உள்ளது, அதற்கு காரணம் இந்த இடங்கள் மிகவும் தனித்துவமானவை அல்லது ஆபத்தானவை.

இந்த இடங்களில் மனிதர்கள் நுழைவதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள் கூட இங்கு சுதந்திரமாகப் பறக்க முடியாது. பூமியில் அப்படி மனிதர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள் இடங்கள் என்னென்ன மற்றும் அங்கு செல்வது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
லாஸ்காக்ஸ் குகை, பிரான்ஸ்
தென்மேற்கு பிரான்சில் அமைந்துள்ள லாஸ்காக்ஸ் குகையானது, 17,000 ஆண்டுகள் பழமையானதாகும் மற்றும் மிகவும் மதிப்புமிக்க சில ஓவியங்கள் இங்கு உள்ளது. 1900-களில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்ட இந்த குகையில், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதன் சூழலைப் பாதிக்கத் தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளின் சுவாசக் காற்றிலிருந்து வெளிப்பட்ட கார்பன் டை ஆக்சைடு, அதிகரித்த ஈரப்பதம் மற்றும் வெளிப்புற பாக்டீரியாக்கள் ஆகியவை ஓவியங்களின் மீது பூஞ்சை வளர்வதற்கு வழிவகுத்தன. இதனால், 1963-ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கம் இந்த குகையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிரந்தரமாக மூடியது. தற்போது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் மட்டுமே இந்த குகைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சுர்ட்ஸி தீவு, அட்லாண்டிக் பெருங்கடல்
சுர்ட்ஸி என்பது 1963 மற்றும் 1967-க்கு இடைப்பட்ட காலத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென உருவான ஒரு எரிமலைத் தீவாகும். இதன் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்காக, சாதாரணப் பார்வையாளர்கள் இங்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இந்த தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் சிறிய ரக விமானங்களின் மூலம் வான்வழியாக மட்டுமே இந்தத் தீவை பார்வையிட முடியும்.
பாம்புகள் தீவு, பிரேசில்
பிரேசிலின் சாவோ பாலோவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவு, மிகவும் ஆபத்தானது என்பதால் 'பாம்புத் தீவு' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீவில், உலகில் வேறு எங்கும் காணப்படாத, மிகவும் அரிதான மற்றும் அதிக விஷம் கொண்ட பாம்புகள் வாழ்கிறது. இந்த பாம்புகளில் ஒன்று கடித்தாலும் மனிதர்கள் ஒரு நொடியில் இறந்து விடுவார்கள், இதன் காரணமாகவே இங்கு நுழைவதற்குக் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Area 51, அமெரிக்கா
நெவாடா பாலைவனத்தில் அமைந்துள்ள Area 51, உலகின் மிகவும் ரகசியமான ராணுவத் தளங்களில் ஒன்றாகும். அமெரிக்க விமானப்படை இங்கு புதிய போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் பரிசோதனைக்குரிய தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்க்கிறது. அசைவைக் கண்டறியும் கருவிகள், தீவிர கண்காணிப்பு அமைப்புகள், எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் விமானப் போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்ட பகுதி என இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக உள்ளன. இங்கு நுழைய மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நுழைபவர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கக்கூடும்.
போவெக்லியா தீவு, இத்தாலி
இத்தாலியில் உள்ள போவெக்லியா தீவு தற்போது கைவிடப்பட்டிருந்தாலும், அதற்கு ஒரு பயங்கரமா வரலாறு உண்டு. ஒரு காலத்தில் 1,60,000 மக்கள் வசித்த இத்தீவு, 1793-ஆம் ஆண்டு பிளேக் நோயின் போது ஒரு தனிமைப்படுத்தல் மையமாக மாறியது. பின்னர், இங்கு ஒரு மனநல மருத்துவமனை நிறுவப்பட்டு, இறுதியில் அதுவும் மூடப்பட்டது. இன்று, பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்க அவ்வப்போது இந்த இடத்தை சட்டவிரோதமாக ஆராய்ந்து வருகின்றனர். இத்தீவு, பேய் நடமாட்டம் உள்ள இடமாகவும், மண்ணில் காணப்படும் மனித எச்சங்களுக்காகவும் அறியப்படுகிறது.
ஹார்ட் ரீஃப், ஆஸ்திரேலியா
பவளப்பாறைத் தொடரின் ஒரு பகுதியான ஹார்ட் ரீஃப், இதய வடிவில் அமைந்துள்ளதுடன், உலகின் மிகவும் புகைப்படம் எடுக்க உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த மென்மையான பவளப்பாறையைப் பாதுகாப்பதற்காக, ஸ்நோர்கெலிங் மற்றும் டைவிங் செய்பவர்கள் அதன் அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பயணத்தின் மூலமே இதை அருகில் இருந்து பார்க்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ முடியும்.
வடக்கு சென்டினல் தீவு, இந்தியா
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள இந்தத் தீவு, 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வரும் பூர்வகுடி இனமான 'சென்டினலீஸ்' மக்களின் வசிப்பிடமாக உள்ளது. இந்த இனத்தினர் தங்கள் பகுதியைத் தீவிரமாகப் பாதுகாத்து வருகின்றனர். இங்கு நுழையும் எந்தவொரு வெளி நபரும் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் வனவிலங்குகளுக்கு இரையாக்கப்படுகின்றன. இத்தீவுக்குள் செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தீவை வான்வழி ஆய்வுகள் செய்ய மட்டுமே அனுமதி உண்டு. நவீன உலகத்துடனான தொடர்பு ஏதுமின்றி, சுமார் 120 முதல் 150 பேர் வரை இங்கு இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
