Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
மதியம் மீந்து போன சாதம் 1 கப் இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
Leftover Rice Halwa Recipe In Tamil: பொதுவாக அசைவ உணவுகளை உட்கொண்ட பின் நிறைய பேருக்கு ஸ்வீட் ஏதாவது சாப்பிடத் தோன்றும். அதுவும் இன்று விடுமுறை நாள் என்பதால், அனைவரது வீட்டிலும் அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். இந்நிலையில் மாலை வேளையில் ஸ்வீட் ஏதாவது சாப்பிட தோன்றும்.
உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா? ஆனால் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் மீந்து உள்ளதா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு ஸ்வீட் செய்யுங்கள். இந்த ஸ்வீட் வாயில் போட்டதுமே கரையக்கூடிய வகையில் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி அல்வா செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (துண்டுகளாக்கப்பட்டது)
* நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மதியம் மீந்து போன சாதத்தை ஒரு கப்
சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த நெய்யுடன் அரைத்த சாதத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு
நீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு தீயை அதிகரித்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு
கிளறி விட்டு இறக்கினால், சுவையான அல்வா தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications