Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
மதியம் மீந்து போன சாதம் 1 கப் இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
Leftover Rice Halwa Recipe In Tamil: பொதுவாக அசைவ உணவுகளை உட்கொண்ட பின் நிறைய பேருக்கு ஸ்வீட் ஏதாவது சாப்பிடத் தோன்றும். அதுவும் இன்று விடுமுறை நாள் என்பதால், அனைவரது வீட்டிலும் அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். இந்நிலையில் மாலை வேளையில் ஸ்வீட் ஏதாவது சாப்பிட தோன்றும்.
உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா? ஆனால் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் மீந்து உள்ளதா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு ஸ்வீட் செய்யுங்கள். இந்த ஸ்வீட் வாயில் போட்டதுமே கரையக்கூடிய வகையில் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி அல்வா செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (துண்டுகளாக்கப்பட்டது)
* நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மதியம் மீந்து போன சாதத்தை ஒரு கப்
சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த நெய்யுடன் அரைத்த சாதத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு
நீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு தீயை அதிகரித்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு
கிளறி விட்டு இறக்கினால், சுவையான அல்வா தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications









