இந்த கஞ்சியை தினமும் 1 டம்ளர் என ஒரு மாதம் குடிங்க.. 4 கிலோ வரை உடல் எடை சர்ர்ர்-ன்னு குறையும்.

Posted By:

Kollu Barley Kanji Recipe In Tamil: எடையைக் குறைப்பது தான் தற்போது பெரும்பாலானோரின் நோக்கமாக உள்ளது. அதற்காக பலர் காலையில் எழுந்ததும் ஜிம் என்று கடினமாக உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள். ஆனால் அது மட்டும் உடல் எடையைக் குறைக்க போதாது. நாம் உண்ணும் உணவுகளும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிகின்றன.

அதற்கு நாம் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் நிறைய உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் கொள்ளு, பார்லி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டுமே உடல் எடையில் மாயங்களைப் புரியும். அதுவும் இவ்விரண்டையும் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைந்து வெளியேறிவிடும்.

Kollu Barley Kanji How To Make a Kollu Barley Kanji Recipe

உங்களுக்கு கொள்ளு பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு பார்லி பவுடருக்கு...

* கொள்ளு - 1 கப்
* பார்லி - 1 கப்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

கஞ்சிக்கு...

* தண்ணீர் - 2 டம்ளர்
* கொள்ளு பார்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 2 பல்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை சேர்த்து, நிறம் மாறி படபடவென்று வெடிக்கும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பார்லியை சேர்த்து, நிறம் மாற வறுத்து இறக்கி, அதையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் மிளகு விதைகளை சேர்த்து வறுத்து இறக்கி, பார்லியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து இறக்கி, அதையும் பார்லியுடன் சேர்த்துக் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த கொள்ளு விதைகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து, ஒரு அகலமான தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் வறுத்த பார்லி, மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பார்லி பொடியை கொள்ளு பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் தினமும் காலையில் கஞ்சிக்கு அந்த பொடியை பயன்படுத்த வேண்டும்.
* இந்த கொள்ளு பார்லி கஞ்சியை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீரை சூடேற்ற வேண்டும்.
* நீர் சூடானதும், அதில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்த பார்லி பொடியை சேர்த்து, கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பூண்டு சுவை பிடிக்குமானால், அதில் 2 பல் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு ஓரளவு கெட்டியாகத் தொடங்கும் வரை கிளறி விட வேண்டும்.
* கஞ்சியானது ஓரளவு கெட்டியானதும், அதை இறக்கினால், சுவையான பார்லி கொள்ளு கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 1, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion