Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரளா ஸ்பெஷல் நேந்திரம் பழம் பஜ்ஜி
Kerala Special Nendram Pazham Bajji: தற்போது அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், அவர்கள் அதிகம் விளையாடுவார்கள். அதிகம் ஓடி விளையாடுவதால், அவர்களுக்கு நிறைய பசிக்கும்.
சில குழந்தைகள் அடிக்கடி ஏதாவது சாப்பிட கேட்பார்கள். சில சமயங்களில் வித்தியாசமாக ஏதாவது சாப்பிட கேட்பார்கள். இந்நிலையில் உங்கள் வீட்டில் நேந்திரம் பழம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.

அதுவும் கேரளாவில் மிகவும் பிரபலமான நேந்திரம் பழ பஜ்ஜியை செய்து கொடுங்கள். இந்த பஜ்ஜி மாலை வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். கேரளாவில் இதை பழம் பொரி என்று அழைப்பர். உங்களுக்கு இந்த நேந்திரம் பழ பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கேரளா ஸ்பெஷல் பழம் பொரி அல்லது நேந்திரம் பழ பஜ்ஜியை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த நேந்திரம் பழம் - 3-4
* மைதா - 1 கப்
* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1-2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* சோடா உப்பு/சமையல் சோடா - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் நேந்திரம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய
நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, சர்க்கரை, மஞ்சள்
தூள், சீரகம், ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் நீரை ஊற்றி கட்டிகளின்றி, மிகவும் நீராகவும் இல்லாமல்,
மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், நேந்திரம் பழத் துண்டுகளை எடுத்து, தயாரித்து
வைத்துள்ள பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து நேந்திரப் பழத்
துண்டுகளையும் மாவில் பிரட்டி பொரித்து எடுத்தால், சுவையான கேரளா
ஸ்பெஷல் நேந்திரம் பழ பஜ்ஜி தயார்.
குறிப்பு:
* பொதுவாக அரிசி மாவை இதில் சேர்க்கமாட்டார்கள். ஆனால் பஜ்ஜி
மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால், சிறிது அரிசி மாவை சேர்த்துக்
கொள்ளலாம்.
* ஏலக்காய் வாசனை பிடிக்குமானால், சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்துக்
கொள்ளலாம்.
* நேந்திரம் பழத்தின் இனிப்புச் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* சமையல் சோடாவை சேர்ப்பது எல்லாம் ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது.
ஆனால் சமையல் சோடா சேர்க்காவிட்டால் பஜ்ஜி தட்டையாக இருக்கும். சமையல்
சோடா சேர்த்தால், பஜ்ஜி நன்கு உப்பி இருக்கும்.



Click it and Unblock the Notifications









