Just In
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 3 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ருசியான... கேரளா இறைச்சி சோறு
கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் இறைச்சி சோறு. இந்த கறி சோறானது பல்வேறு மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதால், ஆளை சுண்டி இழுக்கும் மணத்தைக் கொண்டிருக்கும்.
கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் இறைச்சி சோறு. இந்த கறி சோறானது பல்வேறு மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவதால், ஆளை சுண்டி இழுக்கும் மணத்தைக் கொண்டிருக்கும். கேரளாவில் இந்த இறைச்சி சோறு ரெய்தா மற்றும் அப்பளத்துடன் பரிமாறப்படும். உங்களுக்கு இந்த கேரளா ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்ய வேண்டுமா? அப்படியானால் கீழே கேரளா இறைச்சி சோறு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.
இந்த இறைச்சி சோற்றை மட்டனால் மட்டுமின்றி, சிக்கனைக் கொண்டும் தயாரிக்கலாம். சிக்கன் பயன்படுத்துவதாக இருந்தால், விசில் விட வேண்டிய அவசியம் இல்லை. மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்தாலே போதுமானது. இப்போது மட்டனைக் கொண்டு இறைச்சி சோறு எப்படி செய்வதென்பதைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - ஒரு கிலோ
* பாசுமதி அரிசி - 4 கப்
* வெங்காயம் - 3/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 6
* இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
* புதினா இலைகள் - 3/4 கப்
* கொத்தமல்லி இலைகள் - 3/4 கப்
* தயிர் - ஒரு கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 8-9
* கிராம்பு - 5
* பட்டை - ஒரு துண்டு
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 2 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு குக்கரில் மட்டன் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுக் கொள்ளவும். மிக்சர் ஜாரில் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைப் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு அரைத்ததை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்க்க வேண்டும். பின் அதில் தயிரை சேர்க்கவும். அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
* பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பையும் போட்டு, கையால் நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
* இப்போது குக்கரை மூடி விசில் போட்டு, அடுப்பில் வைத்து மட்டன் நன்கு வேகும் வரை 5-6 விசில் விட்டு இறக்கவும்.
* பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து மட்டன் வெந்துவிட்டதா என பார்த்து, அந்த மட்டனை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஒரு அகன்ற பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடேற்றவும்.
* பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் சிறிது மட்டனில் உள்ள கிரேவியை சேர்க்கவும்.
* பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, சிறிது மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியைப் போட்டு நன்கு கிளறி விடவும்.
* அரிசியானது பாதி வெந்துள்ள நிலையில், வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 15 முதல் 20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சுவையான கேரளா இறைச்சி சோறு தயார்.
Image Courtesy: yummytummyaarthi