Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
வீட்ல கத்திரிக்காய் இருந்தா இப்படி தொக்கு செய்யுங்க... கத்திரிக்காய் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!
Kathirikkai Thokku Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தினமும் சாம்பார், புளிக்குழம்பு மற்றும் குருமா போன்றவற்றையே தொடர்ந்து செய்வது நிச்சயம் விரக்தியை ஏற்படுத்தும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தொக்கு செய்வது சரியான தீர்வாக இருக்கும்.
தொக்கை குழம்பாகவும் சாப்பிடலாம் அல்லது சைடிஷாகவும் சாப்பிடலாம். உங்களுக்கு கத்திரிக்காய் பிடிக்குமென்றால் நிச்சயம் கத்திரிக்காய் தொக்கு உங்களின் பிரச்சினையை தீர்க்கும் ஒன்றாக இருக்கும். இந்த கத்திரிக்காய் தொக்கு சாதம், இட்லி மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

கத்திரிக்காயை இந்த மாதிரி தொக்கு செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சுவையான கத்திரிக்காய் தொக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பிஞ்சு கத்திரிக்காய் - 15
- பெரிய வெங்காயம் - 2
- பெரிய தக்காளி - 2
- பூண்டு - 6 பல்
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- சாம்பார் பொடி- 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- வறுத்த வேர்க்கடலை - 25 கிராம்
- வறுத்த எள்- 2 ஸ்பூன்
- வெல்லம்- 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி
செய்முறை:
- முதலில் தக்காளி, பெரிய வெங்காயம், பூண்டு, வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை, வறுத்த எள் ஆகியவற்றை மிக்ஸியில் மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- கத்திரிக்காயைக் கழுவி அடிப்பாகம் வரை நான்காக கீறி விட்டுக் முழு கத்திரிக்காயை அப்படியே வைத்துக் கொள்ளவும்.
- தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் அந்த கத்திரிக்காயை எண்ணையில் சிறிது நேரம் வறுக்கவும், கத்திரிக்காய் கலர் மாறிய உடன் எடுத்து தனியாக வைத்து விடவும் .
- பின் அதே எண்ணையில் சீரகம், மிளகு போட்டு வெடித்தவுடன் , அரைத்து வைத்து உள்ள மசாலாவை போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், சாம்பார்பொடி, தானியத்தூள் போட்டு வதக்கவும்.
- பின்னர் அதனுடன் புளி தண்ணிர் உப்பு போட்டு,வறுத்து வைத்து உள்ள கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
- தீயை மிதமாக வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேக விடவும். எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் வரை வேக விடலாம்.
- பின் வெல்லம் சேர்த்து .நன்றாக கலந்து கத்திரிக்காய் உடையாமல் புரட்டி வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.
- இது சாதத்துடன் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











