செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும்

Posted By:

Kathirikai Kosumalli Recipe in Tamil: உங்கள் வீட்டில் கத்திரிக்காய் நிறைய உள்ளதா? எப்போதும் கத்திரிக்காயைக் கொண்டு வைத்து சாம்பார் அல்லது பொரியல் தான் செய்வீர்களா? அதுவும் பொரியல் செய்தால், அதை ஒரே மாதிரி தான் எப்போதும் செய்வீர்களா? கத்திரிக்காயை வைத்து புதிதாக ஏதாவது சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் காரைக்குடி ஸ்டைலில் கத்திரிக்காயுடன், உருளைக்கிழங்கை சேர்த்து கத்திரிக்காய் கோசுமல்லியை செய்யுங்கள்.

Kathirikai Kosumalli Recipe How to Make at Home in Tamil

இந்த கத்திரிக்காய்-உருளை கோசுமல்லி செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும். கத்தரிக்காயை இந்த ஸ்டைலில் செய்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கத்திரிக்காய் உருளை கோசுமல்லி சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட பக்காவான சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு காரைக்குடி கத்திரிக்காய் உருளை கோசுமல்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கத்திரிக்காய் கோசுமல்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 4 கத்தரிக்காய் (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
- 2 உருளைக்கிழங்கு (பாதியாக நறுக்கியது)
- 4 கப் தண்ணீர் (உருளைக்கிழங்கை வேகவைக்க)
- 1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 2 தக்காளி (நறுக்கியது)
- 10 பச்சை மிளகாய்
- புளி சிறிதளவு (½ கப் தண்ணீரில் ஊறவைத்தது)
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடுகு
- 3 காய்ந்த மிளகாய்
- 1½ கப் தண்ணீர்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் 4 கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- 2 விசில் வரும் வரை வேகவைத்து, பின்னர் ஆவி தானாகவே அடங்கும் வரை காத்திருக்கவும்.

- வேகவைத்த கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கிலிருந்து நீரை வடித்துவிட்டு, அவற்றின் தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் போடவும்.

- ஒரு கரண்டியைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காயை நன்கு மசித்து தனியாக வைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் வர மிளகாய் சேர்க்கவும்.

- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

- வெங்காயத்தின் பச்சை வாசனை நீங்கி பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பிறகு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

- பின்னர் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

- மசித்து வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

- பின்னர், புளிக் கரைசலைச் சேர்க்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றவும்.

- 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்; புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

- அவ்வளவுதான் அட்டகாசமான கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெடி. இதை இட்லி, ஆப்பம் அல்லது தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 7, 2026, 16:41 [IST]
Desktop Bottom Promotion