Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் வித்தியாசமான கதம்ப சட்னி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும்
Kathamba Chutney Recipe in Tamil: நம்முடைய பிரதான காலை உணவான இட்லி, தோசைக்கு எத்தனை வகை சட்னி, சாம்பார் கண்டுபிடித்தாலும் பத்தாது. ஏனெனில் காலம் காலமாக நாம் இட்லி, தோசையை காலை உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிட்டு வருகிறோம். எனவே தொடர்ச்சியாக ஒரே மாதிரியான சட்னிகள் செய்து சாப்பிடுவது நிச்சயம் இட்லி, தோசையை வெறுக்க வைக்கும்.

எனவே புதுப்புது சட்னியை செய்வது அவசியமாகும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் ஒரு சட்னிதான் கதம்ப சட்னி. இந்த கதம்ப சட்னி பல வழக்கமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் வித்தியாசமான சட்னியாகும். இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பழுத்த தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 1
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- பூண்டு - 3 பல்
- புளி - ஒரு சிறிய துண்டு
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- புதினா - 1 கொத்து
- கொத்தமல்லி - 1 கொத்து
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கேற்ப
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி நறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து வதக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறத் தொடங்கியதும், அதில் வர மிளகாய் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் தோலுரித்து வைத்த இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். கடைசியாக தக்காளி மற்றும் துருவிய தேங்காய், தேவையான உப்பு மற்றும் ஒரு சிறிய துண்டு புளி சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக மாறும் வரை வதக்கவும்.
- அடுப்பை அணைத்து விட்டு அதில் கறிவேப்பிலை, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். இலைகள் சுருங்கியதும் நன்றாக கலக்கவும். இந்த கலவையை நன்றாக ஆற விடவும்.
- இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி முதலில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து அதில் கொட்டவும். சூடான இட்லி, தோசை அல்லது பணியாரத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடவும்!



Click it and Unblock the Notifications