Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
காரைக்குடி கறிவேப்பிலை குழம்பு ரெசிபி... இத சாப்பிட்டா எடை வேகமாக குறையும், முடியும் நல்லா வளருமாம்...!
Karuveppilai Kulambu Recipe in Tamil: கடைகளில் சண்டை போட்டு வாங்குவதும், சாப்பிட அமர்ந்தவுடன் முதல் தனியாக எடுத்து வைப்பதும் கறிவேப்பிலையைத்தான். கறிவேப்பிலை அதன் வாசனைக்கும், தாளிப்பதற்கும் என்று மட்டுமே நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் கறிவேப்பிலையில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
துரதிர்ஷ்டவசமாக அது தெரிந்தாலும் நாம் அதை உட்கொள்ள விரும்புவதில்லை. இன்று இளைஞர்கள் இளம் வயதிலேயே வழுக்கை, இளநரை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக கறிவேப்பிலையை சாப்பிடாததும் ஒரு முக்கிய காரணமாகும்.

இதற்கு சிறந்த வழி கறிவேப்பிலையை சுவையான உணவாக சமைத்து சாப்பிடுவதுதான். சுவையான உணவுகள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது செட்டிநாடு உணவுகள்தான். இந்த பதிவில் கறிவேப்பிலையை வைத்து சுவையான செட்டிநாடு கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- கறிவேப்பிலை - 1/2 கப்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு -10 பல்
- தக்காளி - 1
- சாம்பார் பொடி - ஸ்பூன்
- மல்லி தூள் - 3 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- புளி சாறு - 1 கப்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- உளுந்து - 1 ஸ்பூன்
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- வெல்லம் - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து அதிலிருந்து 1 கப் சாறை
பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் வெந்தயத்தை
சேர்க்கவும்.
- கடுகு வதங்கியதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து
வதக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கறிவேப்பிலை, தக்காளி, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், கொத்தமல்லி
தூள் ஆகியவற்றை நன்றாக விழுதாக அரைக்கவும். தேவைப்பட்டால் இதனுடன்
சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு வதங்கியதும் அரைத்த விழுதை இதனுடன்
சேர்க்கவும்.
- இதை நன்கு கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். பச்சை
வாசனை போகும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடையிடையே
கிளறி விடவும்.
- இப்போது புளித்தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் சிறிதளவு உப்பு
சேர்க்கவும்.
- குழம்பு பதம் வரும் வரை மிதமான தீயில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை
கொதிக்க விடவும். குழம்பை அடுப்பிலிருந்து இறக்கி வைக்குமுன் வெல்லம்
சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது அடுப்பை அணைத்தால் சூப்பரான கறிவேப்பில்லை குழம்பு
ரெடி!



Click it and Unblock the Notifications