Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கார்த்திகை தீபத்துக்கு சாப்ட்டான பொரி அரிசி உருண்டை செய்யுங்க.. டக்கரா இருக்கும்..
Karthigai Deepam Special Pori Arisi Urundai: இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருவிழாவானது டிசம்பர் 03 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் வீடு முழுவதும் தீபங்களால் அலங்கரித்து, பூஜைக்கு பலகாரங்களை செய்து படைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் 1 கப் புழுங்கல் அரிசி இருந்தால், அதைக் கொண்டு பொரி அரிசி உருண்டையை செய்யுங்கள். இந்த உருண்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது பஞ்சு போன்று மென்மையாக இருப்பதால், குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீபத்தன்று பொரி அரிசி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி அரிசி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புழுங்கல் அரிசி - 1 கப்
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 2 1/4 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* தேங்காய் - 1 பெரிய மூடி (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் புழுங்கல்
அரிசியை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த அரிசியுடன், 2 ஏலக்காயை சேர்த்து, ரவா
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/4 கப் நீரை
ஊற்றி, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து, 2 சிட்டிகை உப்பை
சேர்த்து வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து
கிளறி, பின் அரைத்து வைத்துள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து
கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* நீர் வற்றி மாவு சற்று கெட்டியானதும், அதை இறக்கி, வெதுவெதுப்பான
நிலைக்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டி, பின் துருவிய தேங்காயின் மேல் பிரட்டினால், சுவையான பொரி
அரிசி உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications








