Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
கார்த்திகை தீபத்துக்கு சாப்ட்டான பொரி அரிசி உருண்டை செய்யுங்க.. டக்கரா இருக்கும்..
Karthigai Deepam Special Pori Arisi Urundai: இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருவிழாவானது டிசம்பர் 03 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் வீடு முழுவதும் தீபங்களால் அலங்கரித்து, பூஜைக்கு பலகாரங்களை செய்து படைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் 1 கப் புழுங்கல் அரிசி இருந்தால், அதைக் கொண்டு பொரி அரிசி உருண்டையை செய்யுங்கள். இந்த உருண்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது பஞ்சு போன்று மென்மையாக இருப்பதால், குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீபத்தன்று பொரி அரிசி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி அரிசி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புழுங்கல் அரிசி - 1 கப்
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 2 1/4 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* தேங்காய் - 1 பெரிய மூடி (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் புழுங்கல்
அரிசியை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த அரிசியுடன், 2 ஏலக்காயை சேர்த்து, ரவா
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/4 கப் நீரை
ஊற்றி, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து, 2 சிட்டிகை உப்பை
சேர்த்து வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து
கிளறி, பின் அரைத்து வைத்துள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து
கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* நீர் வற்றி மாவு சற்று கெட்டியானதும், அதை இறக்கி, வெதுவெதுப்பான
நிலைக்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டி, பின் துருவிய தேங்காயின் மேல் பிரட்டினால், சுவையான பொரி
அரிசி உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications