கேரட்டை இந்த பக்குவத்தில் கர்நாடகா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க... பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க...!

Posted By:

Karnataka Style Carrot Fry Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தினமும் பொரியல் கேட்பார்களா? ஆனால் சில காய்கறிகளில் பொரியல் செய்தால் வேண்டாம் என்பார்களா? முக்கியமாக கேரட் பொரியல் என்றால் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படிப்பட்டவர்களை கேரட் சாப்பிட வைக்க வேண்டுமா?

அப்படியானால் அந்த கேரட்டை வைத்து கர்நாடகா ஸ்டைலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள். இப்படி கேரட் பொரியலை செய்யும் போது, கேரட் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக கேரட் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் சிறிதளவு சர்க்கரை சேர்க்கப்படுவதால் அதன் சுவை குழந்தைகளுக்கும் பிடித்தது போல இருக்கும். இந்த கேரட் பொரியலை பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடலாம். அந்த அளவிற்கு இது செய்வதற்கும் ஈஸியானது கூட.

Karnataka Style Carrot Fry Recipe How to Make Carrot Poriyal

உங்களுக்கு சுவையான கர்நாடகா ஸ்டைல் கேரட் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் கேரட் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- கேரட் - 4, துருவியது
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - கால் கப்

தாளிக்க:

- சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்து - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

செய்முறை:

- முதலில் கேரட்டை நன்றாக கழுவி, தோல் சீவி, துருவி தனியாக வைக்கவும். அதேபோல தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.

- கடுகு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

- பின்னர் பெருங்காயத்தை சேர்க்கவும்.

- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

- அதன் பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதைத்தொடர்ந்து மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.

- பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.

- கேரட் மென்மையாகி வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

- தேவைப்பட்டால் மூடி வைத்து குறைந்த தீயில் சமைக்கவும்.

- இறுதியாக துருவிய தேங்காயைச் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, February 13, 2026, 20:39 [IST]
Desktop Bottom Promotion