Just In
- 40 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காரடையான் நோன்பு இனிப்பு அடை
காரடையான் நோன்பின் போது பெண்கள் நெய்வேத்தியத்திற்காக காரம் அல்லது இனிப்பு அடையை செய்வது வழக்கம். இந்த வருட காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.
தமிழ்நாட்டில் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க மாசி மாதத்தின் இறுதியும், பங்குனி மாதத்தின் முதல் தேதியிலும் சாவித்திரி நோன்பு என்னும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பின் போது பெண்கள் நெய்வேத்தியத்திற்காக காரம் அல்லது இனிப்பு அடையை செய்வது வழக்கம். இந்த வருட காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.
நீங்கள் காரடையான் நோன்பு மேற்கொள்பவராக இருந்தால், அந்நாளில் விஷேசமாக செய்யப்படும் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே காரடையான் நோன்பு இனிப்பு அடை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து நெய்வேத்தியம் செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி மாவு - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்
* காராமணி - 1 /4 கப்
* ஏலக்காய் - 1 (பொடித்து கொள்ளவும்)
செய்முறை:
* முதலில் காராமணியை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, விசில் விட்டு வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் மற்றும் வெல்லத்தைப் போட்டு, வெல்லத்தைக் கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
* பிறகு தீயை குறைத்துவிட்டு, அதில் அரிசி மாவை மெதுவாக கட்டிகள் சேராதவாறு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு குளிர்ந்ததும் கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது அந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக தட்டி, நடுவே ஒரு ஓட்டை போட்டால், சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை தயார்.
Image Courtesy: subbuskitchen