Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது...
Kambu Adai Dosa Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசிக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு உள்ளதா? அப்படியானால் அந்த கம்பு கொண்டு அருமையான சுவையில் அடை தோசை சுடுங்கள்.

இந்த கம்பு அடை தோசை சுவையாக இருப்பதோடு, ஏராளமான சத்துக்களைக் கொண்டது. முக்கியமாக இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராது. இந்த கம்பு அடை தோசையை வாரம் ஒருமுறை சாப்பிட, எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும்.
இந்த கம்பு அடை தோசை குறித்து அபூர்வாஸ் நளபாகம் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கம்பு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து அரைப்பதற்கு...
* கம்பு - 1 கப்
* வரமிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கம்பை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, கம்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர்
ஜாரில் கம்பை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், இஞ்சி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு,
ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும்
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி மற்றும் நறுக்கிய தேங்காயை சேர்த்து 1
நிமிடம் வதக்கி இறக்கி, அரைத்த கம்புடன் சேர்த்து நன்கு கிளறி, அடை
மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள அடை மாவை தோசையாக சுட்டு, எண்ணெய் ஊற்றி மிதமான தீயில்
வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கம்பு அடை
தோசை தயார்.



Click it and Unblock the Notifications