Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
ருசியான... கல்யாண வீட்டு சேனை வறுவல்
Kalyana Veetu Senai Varuval: கிழங்குகளில் சேனைக்கிழங்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும், அது அற்புதமாக இருக்கும். சேனைக்கிழங்கை சமைக்கும் போது, அது அசைவ உணவிற்கு இணையான சுவையைக் கொடுக்கும்.
அதுவும் தமிழ்நாட்டில் கல்யாண வீடுகளில் சேனை வறுவல் செய்வது வழக்கம். அந்த கல்யாண வீட்டு சேனை வறுவல் மிகவும் ருசியாக இருக்கும். உங்களுக்கு மதிய வேளையில் சாம்பாருக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், வீட்டில் சேனைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு கல்யாண வீட்டு சேனை வறுவலை செய்யலாம்.

இந்த வறுவல் செய்வது மிகவும் சுலபம். மேலும் இதை அப்படியே கூட சாப்பிடலாம். உங்களுக்கு கல்யாண வீட்டு சேனை வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சேனை வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 250 கிராம்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கை மெல்லிய 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு, 1/4 கப் நீரை ஊற்றி, 1/2
டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது உப்பு தூவி அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கேறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக ரோஸ்ட்
செய்ய வேண்டும்.
* இந்த நிலையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார்
தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரில் வேக
வைத்துள்ள சேனைக்கிழங்கையும் சேர்த்து நன்கு மசாலா கிழங்குடன் ஒன்று
சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* மசாலா கிழங்குடன் நன்கு ஒன்று சேர்ந்து நன்கு ரோஸ்ட்டாகி இருந்தால்,
அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான கல்யாண வீட்டு சேனை
வறுவல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications